×

பாட்டியுடன் குளிக்கச் சென்றபோது காவிரியில் மூழ்கி 2 சிறுமிகள் பலி-சென்னையை சேர்ந்தவர்கள்

மேட்டூர் : மேட்டூர் அருகே பாட்டியுடன் குளிக்க சென்ற 2 சிறுமிகள் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சேத்துக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர். சென்னையில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இதனால், குடும்பத்துடன் அப்பகுதிலேயே தங்கியுள்ளார். இவரது தம்பி தமிழ்செல்வன், காஞ்சிபுரத்தில் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். பள்ளி விடுமுறை என்பதால், முருகேசனின் மகள் பவித்ரா(10) மற்றும் தமிழ்செல்வன் மகள் காமாட்சி(7) ஆகியோர் சேத்துக்குழியில் உள்ள பாட்டி பாப்பாத்தி வீட்டுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்திருந்தனர். இந்நிலையில் வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதால், நேற்று சிறுமிகளின் பெற்றோர் அவர்களை அழைத்துச் செல்ல வருவதாக தெரிவித்திருந்தனர்.  இதனிடையே பவித்ரா, காமாட்சி மற்றும் சில சிறுவர்கள் குளிப்பதற்காக நேற்று காவிரியாற்றுக்கு பாட்டி பாப்பாத்தியுடன் சென்றனர். பின்னர், படிக்கட்டில் அமர்ந்தவாறு பாட்டியுடன் சிறுமிகள் குளித்துக்கொண்டிருந்தனர். திடீரென ஆற்றில் இறங்கி நீந்தியுள்ளனர். ஆனால், காவிரியாற்றில் மண் அள்ளி இருப்பதால் ஆங்காங்கே பெரியளவில் பள்ளம் உள்ளன.இதனை தெரியாத சிறுமிகள் ஆழப்பகுதிக்கு சென்றபோது திடீரென நீரில் மூழ்கினர். அவர்களை காப்பாற்றச் சென்ற பாட்டி பாப்பாத்தியும் நீரில் மூழ்கினார். இதனை பார்த்த அவர்களுடன் சென்ற சிறுவர்கள், சத்தம் போட்டு அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களை வரவழைத்தனர்.  அவர்கள் பரிசலில் சென்று அங்கு போராடிக்கொண்டிருந்த பாப்பாத்தியை முதலில் மீட்டனர். பின்னர், நீரில் மூழ்கிய பவித்ரா மற்றும் காமாட்சி ஆகியோரை சடலமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கொளத்தூர் போலீசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

The post பாட்டியுடன் குளிக்கச் சென்றபோது காவிரியில் மூழ்கி 2 சிறுமிகள் பலி-சென்னையை சேர்ந்தவர்கள் appeared first on Dinakaran.

Tags : kaviari ,lid-chennai ,Mattur ,Kaviri ,Salem District ,Liz- ,Chennai ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக...